Delete பண்ண வேண்டாம் என்பது இலங்கையில் சிறுமிகள், பெண்கள் மற்றும் திருநர்களுக்கெதிரான தொழிநுட்பம் சார் வன்முறை தொடர்பான சம்பவங்களை ஆவணப்படுத்தும் நோக்கில் மும்மொழியிலமைந்த ஒரு வலைய அடிப்படையிலான கணக்கெடுப்புக் கருவியாகும். இக்கருவியானது, தொழிநுட்பஞ்சார் வன்முறை என்பது எவ்வாறமையக் கூடும், அத்தகைய வன்முறைகளைக் கையாளும் முறைகள் மற்றும் உறுதுணையளிக்கும் வெளிகள் பற்றிய இணையத் தொடர்புகள் ஆகிய வளங்களோடு ஒரு இணையத் தளத்தில் வைக்கப்படும். Delete பண்ண வேண்டாம் என்பது, எதிர்கால நடவடிக்கைகளுக்காக வன்முறையின் பதிவுகளைப் பராமரிப்பதன் அவசியத்தைச் சுட்டி நிற்கின்றது. இந்த திட்டம் ஜயந்தி குரு உதும்பால, ஸெய்னப் இப்றாஹிம் மற்றும் சச்சினி பெரேரா ஆகியோரினால் CREA வின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது.
சக தலைவர், நிகழ்ச்சிகள், Delete பண்ண வேண்டாம்
மிஷாரி வீரபங்ஸா ஒரு குயர் பெண்ணியவாதியும்குழுக்களிடையிலான இயக்கவியல், சமூக நீதி மற்றும் சமத்துவமின்மை, பாலினம் மற்றும் பாலியல் மற்றும் இந்த செயல்முறைகள் இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் வெளிப்படும் வழிகளில் ஆர்வங்காட்டும் சமூக உளவியலாளரும் ஆவார். மிஷாரி நோர்டிங்ஹம் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் முனைவர் பட்டத்தை பெற்றுள்ளதுடன், Delete பண்ண வேண்டாமுடன் இணையுமுன் அவர் அச்சு ஊடகத்துறையில் மற்றும் உயர்கல்வித்துறையில் பணியாற்றியுள்ளார். தற்போது இவர் Delete பண்ண வேண்டாமின் நிகழ்ச்சிகளுக்கான சக தலைவராக பணியாற்றுகிறார்.
பெண்கள் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்
இணை – உருவாக்குநர் மற்றும் ஆலோசகர் , Delete பண்ண வேண்டாம்
ஜெயந்தி குரு-உதும்பலா ஒரு பெண்ணியவாதி மற்றும் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமுள்ள பெண் உரிமை ஆர்வலர், மேலும் நீண்ட காலமாக மலையேறுபவர் ஆவார். பாலினம், பாலின அடிப்படையிலான வன்முறை, பாலியல், ஆண்மை, பெண்களின் மனித உரிமைகள் மற்றும் மிக சமீபத்தில் விளையாட்டுத் துறையிலுள்ள பெண்கள் தொடர்பான பிரச்சினைகளில் தொழில்நுட்ப ஆலோசகராக, பயிற்சியாளராக, ஆராய்ச்சியாளராக மற்றும் திட்ட முகாமையாளராக தேசிய, பிராந்திய மற்றும் உலக அளவில் பணியாற்றியுள்ளார். 2016 ஆம் ஆண்டில், எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை ஜெயந்தி பெற்றதுடன் இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில், 2016-2019 வரையிலான பெண்கள் உரிமைகளுக்கான நல்லெண்ண தூதுவராக இலங்கையின் மகளிர் விவகார அமைச்சினால் நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு முதல், வன்முறை மோதலைக் குறைப்பதற்கான அரசியல் உரையாடலை எளிதாக்கும் ஆம்ஸ்டர்டாம் அடிப்படையிலான அறக்கட்டளையான டயலொக் எட்வைஸரி குரூப்பின் (Dialogue Advisory Group) ஆலோசகராக இருந்து வருகிறார். அவர் தற்போது இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் பாலியல் துன்புறுத்தல் முறைப்பாட்டுக் குழுவின் தலைவராகவும், இலங்கையில் உள்ள பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் (Women and Media Collective) தலைவியாகவும், இலங்கையில் உள்ள பெண்கள் வள மையத்தின் குழு உறுப்பினராகவும், ஐக்கிய இராச்சியத்தை அடிப்படையாகக் கொண்ட தொண்டு நிறுவனமாகிய விமென் ஒஃப் த வேர்ல்ட் பவுன்டேஷனின் (Women of the World Foundation) அறங்காவலராகவும் உள்ளார். ஜெயந்தி, ஐக்கிய இராச்சியத்தின் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பாலினக் கற்கைநெறியில் முதுகலை மாணிப் (MA) பட்டதாரியாகவும், இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்தில் பெண்கள் தொடர்பான கற்கையில் பட்டப்பின் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.
குயர் பெண்ணிலைவாத செயற்பாட்டாளர்
இணை – உருவாக்குநர் மற்றும் ஆலோசகர் , Delete பண்ண வேண்டாம்
சச்சினி பெரேரா ரிசர்ஜ் (RESURJ) இன் நிர்வாக ஒருங்கிணைப்பாளராக உள்ளார். அவர் தொழில்நுட்பம், பொப் கலாசாரம், பாலியல் மற்றும் இனப்பெருக்க நீதி மற்றும் இன்பம் ஆகியவற்றின் குறுக்குவெட்டுகளில் சிந்திக்கும், ஆராய்ச்சி செய்யும், எழுதும், உருவாக்கும் மற்றும் கற்பிக்கும் இலங்கையைச் சேர்ந்த ஒரு குயர் பெண்ணியவாதி ஆவார். சச்சினி லண்டன் கிங்ஸ் கல்லூரியில் டிஜிட்டல் கலாசாரம் மற்றும் சமூகம் பற்றிய முதுகலைமாணிப் பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலை பட்டமும் பெற்றதுடன் 2019/2020 ஆம் ஆண்டு செவனிங் புலமைப்பரிசில் பெற்றவரும் ஆவார். அவர் கடந்த 14 வருடங்களாக உள்ளூர், பிராந்திய மற்றும் உலகளாவிய பெண்ணியம் மற்றும் பெண்கள் உரிமை அமைப்புகளுடன் தகவல் தொடர்பாடல் மற்றும் ஆலோசனை விடயங்களிலும் பணியாற்றியுள்ளார். சச்சினி தற்போது ரிசர்ஜ் (RESURJ) சார்பாக, பெண்ணிய அமைப்புக்களுக்கான கூட்டணியின் (Alliance for Feminist Movements) வழிநடத்தல் குழுவின் இணைத் தலைவராக உள்ளார். நெபுலா நிதியம் ( Nebula Fund), ஆசிய பெண்கள் நிதியம் (Women’s Fund Asia) மற்றும் டப்ளியூ ( W7) ஆகியவற்றிற்கான ஆலோசனை மட்டத்திலும் அவர் பணியாற்றியுள்ளார்.
பெண்ணிலைவாத செயற்பாட்டாளர்
இணை – உருவாக்குநர் மற்றும் ஆலோசகர் , Delete பண்ண வேண்டாம்
பெண்கள், சட்டம் மற்றும் அபிவருத்திக்கான ஆசிய பசிபிக் மன்றத்தின் (APWLD) பெண்ணிய அறிவு, கற்றல் மற்றும் வெளியீட்டு அதிகாரி ஸைனப் இப்ராஹிம் ஒரு பெண்ணியவாதியாவார். அவர் இலங்கையை தளமாகக் கொண்ட ஒரு பெண்ணிய ஆர்வலர் மற்றும் ஆய்வாளருமாவதுடன் கடந்த 18 வருட அவரது அனுபவத்தின் பெரும்பகுதியில் ஆராய்ச்சி, ஆவணப்படுத்தல், எழுத்து மற்றும் தலையங்கப் பணிகளில் முதன்மையாக சமூக நீதி, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். ஸைனப் SANGAT தெற்காசிய பெண்ணிய வலையமைப்பின் முக்கிய குழு உறுப்பினராகவும், இலங்கையில் வரலாற்று உரையாடல் மற்றும் நினைவகத்திற்கான தொகுப்பின் (The Collective for Historical Dialogue and Memory) அறங்காவலராகவும் உள்ளார். ஸைனப், இந்திய சமூக விஞ்ஞானங்களுக்கான டாடா நிறுவகத்திலிருந்து அபிவிருத்தி கற்கைகளில் முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.